புதன், 27 பிப்ரவரி, 2019

Indian Pilot Caught By Pakistan Army Tamil

இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான் வீடியோ காட்சி வெளியீடு :



இந்தியாவைச் சேர்ந்த விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வரதன் பாகிஸ்தான் ராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்தியா நேற்று நடத்திய வான்வழி தாக்குதலுக்காக பலி தீர்ப்பதற்கு இன்று பாகிஸ்தான் தனது விமானப்படையின் மூலம் இந்தியாவினை தாக்க முற்பட்டது. இதை அறிந்து கொண்ட இந்திய ராணுவம் தனது விமான படையின் மூலம் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. வானில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவில் சேர்த்து இரண்டு விமானங்களும் தீக்கிரையாக்கியது.
இதில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரரின் விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு எல்லைக்கு உள்ளே போய் விழுந்தது. அவர் அதில் இருந்து குதித்து பாராசூட்டில் உதவியுடன் பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார்.
அப்பொழுது அதைக்கண்ட பாகிஸ்தான் மக்கள் விங் கமாண்டர் அபிநந்தன்  அடித்து உதைத்துள்ளனர். அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை மீட்டு தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் மக்கள் மிருகத்தனமாக நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட வீரர் அபிநந்தன் அங்கு எப்படி உள்ளார் என்று வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கமாண்டர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் அபிநந்தன் பதிலளிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டன.

அதில் பாகிஸ்தான் கமெண்ட் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் அளிக்கின்றார் நான் இந்தியாவைச் சேர்ந்தவள் என் பெயர் அபிநந்தன், எனக்கு திருமணம் ஆயிருச்சு சொல்லியிருக்காரு. இதையடுத்து பாகிஸ்தான் கமாண்டர் உங்களை பாகிஸ்தான் எப்படி நடத்துகிறது என்பதை கூறுங்கள் என்று கேட்டதற்கு அபிநந்தன் நான் இங்கு மிகவும் பத்திரமாக உள்ளதாகவும் என்னை எவ்வித கொடுமையும் செய்யவில்லை என்றும் நான் இதை இந்தியாவிற்கு சென்ற பின்னர் மாற்றி கூற மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

அபிநந்தன் பற்றிய சில விவரங்கள்:

Image result for indian air force abinandan
அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பின் கமாண்டர் ஆவார். இவரது தந்தை வரதன் இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் ஆவார். அபிநந்தன் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையில் பயிற்சி பெற்று இந்திய விமானப்படையில் இணைந்தவர் ஆவார்.
அபி நந்தனின் தந்தை மற்றும் தாயார் இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். அபி நந்தனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது அவர்கள் டெல்லியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அரசாங்கம் அவர்களை விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கை:

Image result for indian air force abinandan
இந்திய அரசாங்கம் அபிநந்தன் உடனே விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி அவரை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் உடனே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. அவருக்கு ஏதேனும் துன்பம் இழைக்கப்பட்டால் கா பாகிஸ்தான் கடுமையான பதில் சொல்ல வேண்டியது இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அவரை விடுவிக்க இந்திய அரசாங்கம் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.